அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்… குலுங்கிய கட்டடங்கள்… மக்கள் அதிர்ச்சி…!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சம் அடைந்தனர்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு 7.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிலோ மீட்டர் தொலைவில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால், அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.