பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

          முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14-ந்தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

          மு.க.ஸ்டாலின் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில், அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோன்று, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் அனுப்பினார். அதில், ‘மன்னிப்பு, இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த நடவடிக்கை என்றாலும் சட்டப்படி சந்திக்க தயார்’ என கூறியிருந்தார். நேர ஆசிரியர்களை காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன் இந்தநிலையில் அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசின் சார்பில் சென்னை மாநகர முதன்மை குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜன், இந்த வழக்கை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.