மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்படும் ஒரு கோடி விண்னப்பங்கள்! வீட்டிற்கு வரும் அதிகாரிகள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களில் பாதிக்கு பாதி அதாவது சுமார் ஒரு கோடி பேர் நிராகரிக்கப்பட உள்ளனர்.

 
மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்படும் ஒரு கோடி விண்னப்பங்கள்! வீட்டிற்கு வரும் அதிகாரிகள்!

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக் தற்போது வரை 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் 2 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

 

பெண்கள் முன்னேற்றம் – தமிழக அரசு திட்டங்கள்!

பெண்கள் முன்னேற்றம் - தமிழக அரசு திட்டங்கள்!

 

பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றால் மிகப் பெரிய மாற்றம் சமூகத்தில் உருவாகும். குடும்பத்தினர் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்ற தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளே பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார். இதன் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பது அதிகாமாகியுள்ளது. அவர்களது மாத பட்ஜெட்டில் இது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை!

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை!

 
இதன் அடுத்தகட்டமாக புதிய பாய்ச்சலாக மாதம் 1000 ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் மாதம் 1000 கோடி ரூபாய் என்ற அளவில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

அதிகாரிகளுக்கு சவாலான பணி!

அதிகாரிகளுக்கு சவாலான பணி!

 

இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு கோடி பேரை பயனாளிகளாக சேர்க்கும் மிகவும் சவாலான பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தலைமைச் செயலாளர் முதல் பல்வேறு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், அரசு ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 24ஆம் தேதி முதல் மக்களிடம் இருந்து மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

 

ஒன்றரை கோடி விண்ணப்பங்கள்!

ஒன்றரை கோடி விண்ணப்பங்கள்!

 
 

தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு அறிவிப்பு!

 
எனவே சுமார் இரண்டு கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் ஒரு கோடி பேர் மட்டும் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளதால் பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை சரிபார்க்க அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நாம் ஏற்கெனவே நமது சமயம் தமிழில் குறிப்பிட்டிருந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் அது தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மகளிர் உரிமைத் தொகை – கள ஆய்வும் குறுஞ்செய்தியும்

மகளிர் உரிமைத் தொகை - கள ஆய்வும் குறுஞ்செய்தியும்

 

அதே சமயம் இந்த கள ஆய்வு அனைத்து விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கும் சென்று நடத்தப்படாது. விண்ணப்பங்களை சரிபார்க்கும் பொருட்டு தேவையேற்பட்டால் மட்டுமே கள ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள ஆய்விலும் தேர்வாகிறவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.