தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தீபாவளி ஸ்பெஷல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது எந்த தேதியில் இயக்கப்படுகிறது? முன்பதிவு தொடர்பான விவரங்கள் என்ன போன்ற விவரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இதுவரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னைக்கு மைசூரு, விஜயவாடா, கோவை, நெல்லை என நான்கு ரயில் சேவைகள் கிடைத்துள்ளன. டிக்கெட் கட்டணம் அதிகமிருந்தாலும் விமானப் பயணம் போன்ற சொகுசு வசதியை அனுபவித்து விட வேண்டும் என்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிவேக பயணமும், உயர்தர வசதிகளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிச் சிறப்பு என்று சொல்லலாம்.

 

தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்

 

​தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்

 

இந்நிலையில் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதனை நாட்டின் பெரும்பாலான மக்கள் கொண்டாடுவர். எனவே வெளியூர் பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகம் நாடுவர். எனவே கூடுதல் பேருந்து, ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த லிஸ்டில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் சேர்ந்திருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.

 

​சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

 

​சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

 

அதுசரி, எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது? நம்முடைய தமிழகத்திற்கு ஏதாவது நன்மைகள் இருக்கின்றனவா? எனக் கேள்வி எழலாம். ஆமாம். சென்னையில் இருந்து ரயில் சேவை அறிவிக்க திட்டமிட்டு வருகின்றனர். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வரும் தீபாவளியை ஒட்டி மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர். இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை – எர்ணாகுளம் – பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளது.

 

​சென்னை டூ பெங்களூரு ரூட்

 

​சென்னை டூ பெங்களூரு ரூட்

 

8 பெட்டிகள் உடன் இயக்கப்படும். சென்னையில் இருந்து வியாழன் அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவிற்கு அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு சென்றடைகிறது. வெள்ளி அன்று பெங்களூருவில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை பிற்பகல் 1.30 மணிக்கு போய் சேருகிறது. மேலும் பெங்களூரு – எர்ணாகுளம் வழித்தடத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிறு அன்று இரவு 11.30 மணிக்கு பெங்களூருவில் புறப்படும் ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

 

​பெங்களூரு டூ எர்ணாகுளம்

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையில் 6 ரயில் சேவைகளும், சென்னை மற்றும் பெங்களூரு இடையில் 2 ரயில் சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இடையில் காட்பாடி, ஜோலார்பேட்டை, கோவை, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை தென்னிந்தியாவில் தான் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

​தெற்கு ரயில்வே விளக்கம்

 

​தெற்கு ரயில்வே விளக்கம்

 
 

​100 சதவீதம் சரியான நேரம்

 

​100 சதவீதம் சரியான நேரம்